வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் உள்ள நிழற்குடையில் பயணிகள் அமரும் இடம் சேதமடைந்து கிடப்பதை சரிசெய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் புதுப்பட்டி ஊருக்கு செல்லக்கூடிய பயணிகள் வெயில், மழையில் பாதிக்காமல் நிற்பதற்காக நிழற்குடை ஒன்று உள்ளது. அந்த நிழற்குடையில் உள்ள பயணிகள் அமரும் இருக்கைகள் பல நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அதோடு தூசி படிந்த நிலையில் இருப்பதோடு, நிழற்குடைக்குள் லைட் வசதி இல்லாததால் குடிமகன்கள் நிழற்குடையை பாராக மாற்றியுள்ளனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.