பெங்களூரு : கர்நாடகா அமைச்சரவையை விரிவுபடுத்த முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜ மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்களுக்கு இடம் உள்ளது. இதில் 18 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். 16 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, அமைச்சரவை விரிவுப்படுத்த எடியூரப்பா பல மாதமாக முயன்று வருகிறார். இந்நிலையில், இது பற்றி விவாதிக்க டெல்லி சென்ற எடியூரப்பா, பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.