மீனவ கிராமத்தை சேர்ந்த 13 பேரை ஊரை விட்டு தள்ளி வைத்ததை எதிர்த்த வழக்கில் நாகை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: மீனவ கிராமத்தை சேர்ந்த 13 பேரை ஊரை விட்டு தள்ளி வைத்ததை எதிர்த்த வழக்கில் நாகை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் மீன் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 13 பேருக்கு வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார். மீன் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட 13 பேரையும் பஞ்சாயத்துக்காரர்கள் ஊரை விட்டு தள்ளி வைத்தனர். பஞ்சாயத்துக்காரர்களின் உத்தரவுக்கு எதிராக 13 பேரும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

Related Stories: