டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.