சிவகாசியில் குடியிருப்பு பகுதியில் திரிந்த நட்சத்திர ஆமை பிடிபட்டது: திருவில்லி. வனப்பகுதியில் விடுவிப்பு

திருவில்லிபுத்தூர்: சிவகாசியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த நட்சத்திர ஆமையை பிடித்த வனத்துறையினர், திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் விடப்பட்டது. சிவகாசி நகரில் நெருக்கமாக உள்ள குடியிருப்பு பகுதியில் நட்சத்திர ஆமை ஒன்று நேற்று சுற்றித்திரிந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் திருவில்லிப்புத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் நட்சத்திர ஆமையை சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர். பின்னர் அந்த நட்சத்திர ஆமையை திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நட்சத்திர ஆமை அதிகமாக வசிக்கும் பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர். மேலும் சிவகாசி குடியிருப்பு பகுதிக்கு நட்சத்திர ஆமை எவ்வாறு வந்தது என்பது குறித்து திருவில்லிபுத்தூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: