பொங்கலூர்: கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்த விவகாரத்தில் விஏஓவுக்கு, வருவாய் துறை அதிகாரி மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராம நிர்வாக அலுவலரின் செல்போன் எண்ணுக்கு வருவாய் அதிகாரி ஒருவர் தொடர்பு கொள்கிறார். பின்னர் செல்போனில் அந்த வருவாய் அதிகாரி கிராவல் மண் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்தது தொடர்பாக பேசுகிறார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சட்டத்துக்கு புறம்பாக மண் ஏற்றி சென்ற லாரியை தான் பிடித்ததாக கூறுகிறார்.