நெல்லை: கோடைகாலம் வருவதற்கு முன்பாகவே பொள்ளாச்சியில் இருந்து நெல்லைக்கு இளநீர் வரத்து அதிகரித்தபோதும் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. செவ்விளநீர் ரூ.40 வீதம் விற்கப்படுகிறது. மழை காலம் முடிந்து தற்போது பனிப்ெபாழிவு சீசன் துவங்கியுள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகாலை மற்றும் இரவில் குளிருடன் குளிர்ந்த காற்று வீசியபோதும் நண்பகலில் வெயிலின் தாக்கம் நெல்லை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உச்சி வெயில் நேரத்தில் பயணிப்பவர்கள் வசதிக்காக சாலையோர கரும்புச்சாறு, தென்னை நீராபானம், கேப்பை கூழ், இளநீர் போன்ற கடைகள் அதிகமாக தோன்றி வருகின்றன.