பெங்களூரு: நித்யானந்தாவுக்கு வழங்கிப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி, நித்யானந்தாவுக்கும், கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கும் கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு ராம்நகரம் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா ஆசிரமத்தில் சீடர்களாக இருந்த லெனில் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரின் ேபரில் நித்யானந்தாவை பிடதி போலீசார் கடந்த 2010 ஏப்ரல் 11ம் தேதி கைது செய்தனர். 53 நாட்கள் சிறையில் இருந்தபிறகு ‘‘விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்ககூடாது, வெளிநாடு செல்லக்கூடாது’’ என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்து நித்யானந்தாவை, கடந்த 2010 ஜூன் 11ம் தேதி ஜாமீனில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில், லெனின் கருப்பன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நித்யானந்தா மீது ராம்நகரம் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது.