காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒடிஷா பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: காதலனுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை என்ற பகுதியில் ஒடிஷாவைச் சேர்ந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது காதலனை போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் காஞ்சிபுரத்தை அடுத்த படப்பை ஆத்தனஞ்சேரியில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை அவருக்கு இரவுப்பணி ஷிப்ட் என்பதால், தோழி மட்டும் காலை வேலைக்கு சென்றுள்ளார். மாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பி பார்த்தபோது இளம்பெண் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணின் உடலில் பல இடங்களில் நகக்கீறல்களும், கழுத்து பகுதி சிவந்தும் காணப்பட்டுள்ளது.

ஆடைகள் கிழிந்து அலங்கோலமாக கிடந்ததால் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரத்தில் தங்கி பணிபுரிந்து வரும் இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் மணீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நேரம் முதல் மணீஷின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது, இதனால் காவல்துறையினர் மணீஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: