புதுடெல்லி: போலீஸ் தகவல் தொடர்புக்காக மல்டி மீடியா மற்றும் காணொளி காட்சி வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ‘போல்நெட் 2.0’ சேவையை மத்திய உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த ராய் நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரழிவு நிவாரண அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று தொடங்கியது. இதில் போல்நெட் 2.0 சேவையை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் நேற்று தொடங்கி வைத்தார். மல்டி மீடியா, காணொளி காட்சி வசதிகளுடன் போல்நெட் சேவை தற்போது மேம்படுத்தப்பட்டு, போல்நெட் 2.0 எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.