தமிழகம் திருவில்லிபுத்தூர் அருகே லாரிகள் மோதி 2 பேர் படுகாயம் Jan 14, 2020 லாரிகள் விபத்துக்குள்ளாகின்றன திருவிலிபுத்துர் திருவிலிபுத்துர் திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகரில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அழகாபுரி அருகே ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மகேந்திரமணி, கோபால் படுகாயம் அடைந்து, லாரியின் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த நத்தம்பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கிய மகேந்திரமணி, கோபால் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை
மதுரை எய்ம்ஸ் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் : உயர்தர தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க பரிந்துரை!!
மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக் கூடாது : போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்ததை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு