சென்னை: ரோட்டரி கிளப் சார்பில் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான ஹேமமாலினி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவில் சென்னை சில்க் சிட்டி ரோட்டரி கிளப், டிவிஎஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை முதல் முறையாக நடத்த உள்ளோம். இந்தப்போட்டியில் எம்ஒபி வைஷ்ணவா, எத்திராஜ், மகளிர் கிறித்துவக் கல்லூரி, எஸ் எஸ் எஸ் ஜெயின், பாரதி பெண்கள் கல்லூரி, செல்லம்மாள், எஸ்ஐஈடி, ஏஎம் ஜெயின் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் ஜனவரி 16, 17 தேதிகளில் சென்னை தி நகரில் உள்ள ஆர்கேஎம் திடலில் நடைபெறும்.