கிளப்பில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்கள்: வீடியோ எடுத்த தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்

திருமலை: ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் உள்ள கிளப்பில் பெண்களை வைத்து ஆபாச நடனத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை அங்கு சென்ற போலீசார், கிளப்பில் நடந்த ஆபாச நடனத்தை நிறுத்தினர். அப்போது அங்கிருந்து சிலர் தப்பிஓடினர். தொடர்ந்து போலீசார் 21 இளம்பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த தொலைக்காட்சி சேனல்களின் வீடியோகிராபர்கள், இளம்பெண்களை வீடியோ எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இளம்பெண்கள் தங்களை வீடியோ எடுக்கக்கூடாது என்று கூச்சல் போட்டு கேமராக்களை பறித்தனர்.

மேலும் செல்போனில் வீடியோ எடுத்த ஒரு வீடியோகிராபரின் செல்போனை பறித்து தரையில் போட்டு உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து கேமராக்களை பறித்து வீடியோகிராபர்களிடம் திருப்பி வழங்கினர். மேலும் 21 பேரையும் ஜூப்ளிஹில்ஸ் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் அழைத்து வந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர்.

இதற்கிடையே போலீஸ் வரும் தகவலை முன்னதாகவே அறிந்த கிளப் உரிமையாளர், அந்த கிளப்பை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்த பிரசாத் ஆகியோர் தான் போலீசார் வரும்போது அங்கிருந்து தப்பிஓடியது தெரிந்தது. விசாரணை தொடர்கிறது.

Related Stories: