திருப்பதி: திருப்பதி மங்கலம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பதி நகரின் பிரதான சாலையாக விளங்குவது கரக்கம்பாடி சாலை, ரேணிகுண்டா சாலை. இதில் சென்னை, நெல்லூர், ஸ்ரீகாளஹஸ்தி, கடப்பா ஆகிய ஊர்களில் இருந்து திருப்பதிக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். இந்த இரண்டு பிரதான சாலைகளையும் இணைக்கும் மங்களம் பகுதியில் வட்டார போக்குவரத்து கழகம் அலுவலகம் எதிரே உள்ள செட்டிபல்லி சாலையை உள்ளூர் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசலும் காலவிரயம் குறையும்.