திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள ஆதியூர் பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டது குறித்த சிக்னல் சில தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்றது. ஜிபிஎஸ் மூலமாக இடம் கண்டறியப்பட்டு மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உளவுத்துறையினர் சாட்டிலைட் போன் பயன்படுத்திய நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உளவுத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஏ.) மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குன்னத்தூர் தவிர அருகேயுள்ள காங்கயம் பகுதியிலும் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டுள்ளது.