இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை துணை தேர்வின்போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலமாகவோ அல்லது வீடுகளுக்கு நேரில் சென்றோ தொடர்பு கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறவேண்டும். மேலும் தேர்வு எழுதாததற்கான காரணங்களை கண்டறிந்து, மீண்டும் தேர்வு எழுத சம்மதிக்க வைக்க வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 150 மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பு பொதுதேர்வில் 123 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவில்லை. அதன்படி மொத்தம் 273 மாணவ, மாணவிகளையும் முதன்மை கல்வி அலுவலர் உஷா மேற்பார்வையில் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு துணை தேர்வு எழுத வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
The post 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு appeared first on Dinakaran.