கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு

சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் 5 பேர் நேற்று விடுமுறை என்பதால் அருகில் கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கல் குவாரியில் இறங்கிய 3 மாணவர்கள் அடுத்தடுத்து ஆழப்பகுதியில் சிக்கி கொண்டனர். இதனை கண்டதும் பதறி போன மற்ற இருவரும் நீச்சல் தெரியாததால் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த வீரர்கள் குவாரியில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை கைவிட்ட தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் ரப்பர் படகு மூலம் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது உயிரிழந்தவர்களின் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் சாரதி என்ற மாணவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் சாரதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஆகியோரை தேடும் பணி தொடர்கிறது.

The post கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: