வருசநாடு: கடமலைக்குண்டு அருகே விளைநிலங்களில் காணப்படும் பழமையான கல்வெட்டுகள் மற்றும் தடுப்பு சுவர் குறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள அய்யனார்கோயில் மலைப்பகுதி மற்றும் வைகை ஆற்றங்கரையோரத்தில் உள்ள விளைநிலங்களில் தொன்மையான கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆற்றின் கரையோரத்தில் உள்ள விளைநிலத்தில் சுமார் 1 கிமீ தூரத்துக்கு கருங்கற்கள் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட பழமையான தடுப்பு சுவர் காணப்படுகிறது.