சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணைய அலுவலகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் ேததி (இன்று) முதல் 21ம் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னிப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்து மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம். மேலும் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் 22,295 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராத தொகையாக ரூ.4,64,06,750 நிர்ணயிக்கப்பட்டது. வாகன வரியாக தொகை ரூ.1,15,94,095 மற்றும் வரியாக ரூ.32,15,818 நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.8,33,39,788 அரசு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் 2,224 வாகனங்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைபிடிக்கப்பட்டுள்ளது.