நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்காக கவுன்சிலரின் கணவருக்கு மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொன்றது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூரையடுத்த இருக்கூரைச் சேர்ந்த செந்தில் குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில் உள்நோக்கத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகம் அளித்துள்ள வாக்குமூலத்தில் இருக்கூர் ஊராட்சி துணைத் தலைவராக தனது மனைவியை தேர்வு செய்வதற்கு ஆதரவுத்தர மறுத்ததால் மதுவில் ஆசிட் கலந்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.