புதுடெல்லி: சிறைப் பிடிக்கப்பட்ட யானையை விடுவிக்கக் கோரி பாகன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானை என்ன இந்திய குடிமகனா? என கேள்வி எழுப்பியது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் யானை ஒன்று மாயமானது. அதை மீட்டுத் தரக்கோரி நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அடுத்த 2 மாதங்களில் யமுனா புஷ்தா பகுதியில் டெல்லி வனத்துறையினர் அந்த யானையையும், அதன் பாகனையும் கண்டுபிடித்து மீட்டனர். ஆனால், வனத்துறையினர் யானையை சிறைப் பிடித்து அடைத்து வைத்தனர்.