புதுடெல்லி, ஜன.9: ‘‘இந்தாண்டு ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட உத்தேச மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டது,’’ என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இந்த நிதியாண்டுக்கான தேசிய வருவாயின் முன்கூட்டிய மதிப்பீட்டை, தேசிய புள்ளியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், நாட்டின், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ (ஜிடிபி) 5 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 2 சதவீதம் குறைவானது. 5 சதவீதம் அளவு கடந்த 11 ஆண்டுகளில் மிக குறைவானது. இந்நிலையில், இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது: