வால்பாறை: வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள்ள உள்ளன. இவை அவ்வப்ேபாது வனங்களில் இருந்து வெளியேறி இறை உண்பதற்காக குடியிருப்பு, தேயிலைதோட்டம், ரேஷன் கடைளில் உள்ளிட்டவற்றையில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின் அங்கு இருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாரி இறைத்து சாப்பிட்டும் வீசியும் சேதப்படுத்தி உள்ளன.