சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் நின்ற காரை யானை கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ம்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள் இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு 5வது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் நடமாடி கொண்டிருந்தது.