சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் நின்ற காரை யானை கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திம்பம் மலைப்பாதையில் யானைகள் இரவு நேரத்தில் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு 5வது கொண்டை ஊசி வளைவில் ஒரு யானை தனது குட்டியுடன் நடமாடி கொண்டிருந்தது. அப்போது சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு முயற்சி செய்தது.