பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரையும், அவருடைய கூட்டணி கட்சித் தலைவர்களையும் பேய், பிசாசுகள் என லாலுவும், அவரது மனைவியும் திட்டி தீர்க்கின்றனர். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் தற்போதைய பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரும் ஒரு காலத்தில் அண்ணன், தம்பியாக பழகினர். லாலுவின் மனைவி ரப்ரி தேவியை ‘பாபி’ (அண்ணி) என்றுதான் நிதிஷ் அழைப்பார். லாலு பிரசாத் கடந்த 1990ம் ஆண்டு பீகார் முதல்வரானார். கடந்த 1997ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி சிறை செல்ல வேண்டி இருந்ததால், மனைவி ரப்ரி தேவியை முதல்வராக்கினார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள முதல்வரின் அரசு பங்களாவில் இருவரும் லாலுவும், ரப்ரிதேவியு–்ம 15 ஆண்டுகள் வசித்தனர். கடந்த 2005ம் ஆண்டு நிதிஷ் குமார் முதல்வரானதும் அந்த வீட்டில் குடியேறினார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் லாலுவுடன் தான் நகைச்சுவையாக பேசிய விஷயம் ஒன்றை நிதிஷ் சமீபத்தில் டிவிட்டரில் வெளியிட்டார்.