ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!!

பெங்களூர்: பாலியல் பலாத்காரம், ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 31-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராவதாக கூறி பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார். வரும் 31-ம் தேதி ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பும் பிரஜ்வலை அன்று இரவே கைது செய்ய எஸ்.ஐ.டி. போலீஸ் திட்டமிட்டுள்ளது.

The post ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!! appeared first on Dinakaran.

Related Stories: