5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. குறிப்பாக சிக்னல் டிராஃபிக்கை குறைப்பதற்காக அதிக அளவிலான செல்போன் டவர்கள் மற்றும் கேபிள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே முதலீடுகளை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்துவதை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : வாடிக்கையாளர்கள் ஷாக் appeared first on Dinakaran.