எப்போதும் ஆன்லைனிலேயே மூழ்கி இருக்கும் தனது மனைவியின் நடத்தை அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் தமன்னா, தனது மகளை தூக்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை கண்டித்ததால், மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ‘ரீல்ஸ்’-யில் மூழ்கிய மனைவி குழந்தையுடன் மாயம்: போலீசில் புகாரளித்த கணவர் தவிப்பு appeared first on Dinakaran.