புதுடெல்லி: ஒளிபரப்பு செலவுகளை குறைப்பதற்காக, லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்களை ஒன்றாக இணைப்பதற்காக, 6 பேர் கொண்ட குழுவை வெங்கையா நாயுடு அமைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவைக்கு தனித்தனி டி.வி. சேனல்கள் உள்ளன. இதில் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தில் நடக்கும் விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் நாடாளுமன்ற விவகாரங்கள், தற்போதைய நிலவரங்கள் மற்றும் பயனுள்ள கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.