மின்கசிவால் பிரிட்ஜ் வெடித்து 5 சிறுவர்கள் பலி

காசியாபாத்: உபி .யின் காசியாபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் காலனியைச் சேர்ந்தவர் பர்வீன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். வீட்டின் தரைத்தளத்தில் உள்ள பிரிட்ஜ் ,மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் பர்வீன் (40), பாத்திமா (12), சாகிமா, ரதியா (8), அப்துல் அஜீம் (8), அப்துல் அகமது (5) தீயில் கருகி பரிதாபமாக பலியாயினர். முதல்கட்ட விசாரணையில், பிரிட்ஜின் மீது டிவி வைக்கப்பட்டு இருந்ததால், மின்கசிவு ஏற்பட்டு வெடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. தரைத்தள தீ, அவர்களின் அறைக்கும் பரவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்குமு் என தெரியவந்துள்ளது.

Related Stories: