ஒடிசாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

புவனேஸ்வர் : ஒடிசாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக தோட்டக்கலைத்துறை இயக்குநர் பிஜய் கேதன் உபாத்யாயா, அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஒடிசா அரசு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

Related Stories: