புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ரயில்வே துறைக்கு சொந்தமான ₹80 கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. அப்போது சிலர் பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்துதல், தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.