பனாஜி: அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர், புத்தாண்டு தினத்தை குடும்பத்தினருடன் கோவாவில் கொண்டாடுவதற்காக கோவா வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அசோக் வராத்கர் கடந்த 1960ம் ஆண்டு மருத்துவராக பணிபுரிய இங்கிலாந்து சென்றார். இவரது மூன்றாவது மகன் லியோ வராத்கர், 2017ம் ஆண்டு முதல் அயர்லாந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார்.