புருலியா: பாஜவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள், மக்கள் சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகின்றார். நேற்றும் புருலியா நகரில் 6வது முறையாக 5 கி.மீ. தொலைவு பேரணி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்தது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் தேசவிரோதிகள் என்பது போன்ற முத்திரையை உருவாக்குவதற்கு பாஜ அரசு முயற்சித்து வருகின்றது.