திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள தனியார் திருமண மாளிகையில், மார்கழி மாதத்தை முன்னிட்டு நாதஸ்வரம், தவில் இன்னிசை கச்சேரி நடந்தது. பிரபல தவில் வித்வான் முருகேசன் தலைமை வகித்தார். திமுக கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு வரவேற்றார். விழா குழு நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சைலஸ் முன்னிலை வகித்தனர். திமுக எம்பி கலாநிதி வீராசாமி, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.