ஆவடி: ஆவடி திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சிடிஎச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்த சாலை வழியாக ஆவடி பகுதியில் உள்ள ராணுவத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவுக்கழகம், ரயில்வே பணிமனை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் நுழைவு வாயில் அருகில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில், இருந்து கடந்த இரு மாதங்களாக கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.