சென்னை: ஹிட்லர் நடவடிக்கையை போல் மோடி நடவடிக்கை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, பொருளாளார் நா.சே.ராமச்சந்திரன், கோபண்ணா, சிரஞ்சீவி, வக்கீல் செல்வம், தாமோதரன், ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், நாஞ்சில் பிரசாத், மயிலை தரணி, எம்.பி.ரஞ்சன்குமார், திருவான்மியூர் மனோகரன், டெல்லிபாபு, எஸ்.கே.நவாஸ், கடல் தமிழ்வாணன், ஹசன் அருண் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். கே.எஸ்.அழகிரி கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் 135வது நிறுவன நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தானது. இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.