திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் 29 கிராமங்களை இணைத்து அமராவதி தலைநகர் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார். இதற்காக 34 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு விவசாயிகள் வழங்கினர். இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன், மாநிலத்தில் 3 இடங்களில் தலைநகர் அமைப்பது தொடர்பான தகவலை சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.