சென்னை: சென்னையில் நடைபெறும் ஏ டிவிஷன் ஹாக்கிப் போட்டியில் எஸ்பிஐ, ஆர்பிஐ வங்கிகள் அரையிறுதிக்கு முன்னேறின. எழும்பூர் ஹாக்கி அரங்கில் முதலில் நேற்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்டிஐ)-யுனிவர்சல் ஹாக்கி கிளப் அணிகள் மோதின. அதில் இரண்டு அணிகளும் தலா 2 கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் எஸ்பிஐ அணி 2-1 என்ற கோல் கணக்கில் யுனிவர்சல் ஹாக்கி கிளப்பை அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக எஸ்பிஐ அணியின் செட்ரிக் டி க்ரூஸ் 2 கோல்களும், யுனிவர்சல் அணியின் கணேஷ், சாந்தகுமார் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.