சென்னை : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பாலியல் வன்முறையில் தமிழகம் 2ம் இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த புள்ளி விவரம் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆய்வு நடத்தியது. அதில் 2018-2019ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.