அமராவதிக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் உண்ணாவிரதம்

திருமலை: ஆந்திர சட்டப்பேரவையில்  முதல்வர் ஜெகன்மோகன் சமீபத்தில் பேசுகையில், தென்ஆப்பிரிக்காவை போன்று ஆந்திராவில் 3 இடங்களில் தலைநகர் அமைப்பதால் அனைத்து பகுதியும் வளர்ச்சி பெறும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு சந்திரபாபு ஆட்சியின்போது தலைநகர் அமைப்பதற்காக 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கிய விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமராவ தியில் தலை நகரம் அமைக்க நிலம் தந்த விவசாயிகள் வெங்கடபாளையம் பகுதியில்  நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: