டெல்லி: மாணவர்களைத் தாக்கிய டெல்லி போலீசுக்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாமியா பல்கலைக் கழகத்திற்குள் போலீஸ் நுழைய அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு மாணவர்களை போலீஸ் தாக்கியதாக சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.