பதான்:உத்தரப் பிரதேச மாநிலம், கோட்வாலியைச் சேர்ந்தவர் பிரவீன். இவருக்கும் அஜம்காரைச் சேர்ந்த ரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. மாமியார் வீட்டு விருந்து முடிந்த நிலையில், மணமக்கள் கோட்வாலிக்கு திரும்பினர். நேற்றுக் காலை பிரவீன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு அனைவரும் அலங்கோலமாக தரையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்து, உள்ளே சென்றனர். அங்கு புதுப்பெண் ரியாவை தவிர மற்றவர்கள் அனைவரும் மயங்கி கிடந்ததனர். தண்ணீர் தெளித்து அவர்களை எழுப்பியபோது, அவர்கள் பேந்த, பேந்த விழித்தனர். அதன் பின்னர்தான், இரவு உணவை சாப்பிட்டதும் அவர்கள் மயங்கியது தெரியவந்தது.