சென்னை: கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் புகுந்து பெண்ணிடம் ஐ-போன், ஆயிரம் ரூபாயை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது ெசய்தனர்.சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (33). இவர், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளார். கடந்த 6ம் தேதி கே.ேக.நகர் பொன்னம்பலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இவருக்கு இருமூடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முத்துமாரியப்பன் தனது ஐ-போன் மற்றும் ஆயிரம் ரூபாயை ஒரு பையில் ைவத்து தனது மனைவி பிரதீபாவிடம் கொடுத்துள்ளார். கூட்ட நெரிசலில் பிரதீபா வைத்திருந்த பை மாயமானது. பின்னர் சம்பவம் குறித்து பிரதீபா கே. ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.