சென்னை: கிண்டியில் காவலர்கள் என்று கூறி காமேஷ் என்ற இளைஞரை 5 பேர் கும்பல் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமேஷின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பல் சில மணி நேரம் கழித்து காமேஷை விடுவித்து உள்ளது. இளைஞர் காமேஷ் கடத்தப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.