அம்பத்தூர்: அம்பத்தூர், லெனின் நகர், 2வது மெயின் ரோட்டில் வசிக்கும் தம்பதிக்கு 6 மற்றும் 10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கடந்த 30ம் தேதி மாலை இரு சிறுமிகளும் டியூஷன் சென்றுவிட்டு லெனின் நகர், 10வது மெயின் ரோடு வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) என்பவர், 10 வயது சிறுமியை தனியாக அழைத்து, பேச்சு கொடுத்தபடி கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டார்.