திருமலை: குண்டூர் அரசு மருத்துவமனையில் முதல்வர் ஜெகன்மோகன் ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய அஸ்ரா திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது: மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அறுவை சிகிச்சை செய்த நோயாளி வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் வீடு திரும்பிய நோயாளி தனது குடும்பத்தில் உள்ளவர்களின் பசியைப் போக்குவதற்காக வேலைக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ஓய்வு எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதனை போக்குவதற்காக மருத்துவர்கள் வழங்கும் பரிந்துரையின்படி எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ₹225 முதல் மாதத்திற்கு 5 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இதில் பயன்பெறுவார்கள்.