திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசிற்கு உத்தரவிடக் கோரி, பிந்து அம்மிணி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் பிந்து அம்மிணி. கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் கொச்சி வந்தபோது அவரை சந்திக்க சென்ற பிந்து அம்மிணி மீது ஒருவர் மிளகு ஸ்பிரேயை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பிந்து அம்மிணி கூறுகையில், இளம் பெண்களை சபரிமலை செல்ல அனுமதிக்க மறுக்கும் போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் போலீஸ் மற்றும் கேரள தலைமை செயலாளருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.