புதுடெல்லி: மக்களவை கேள்வி நேரத்தில், திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியதாவது: அவையில் நிதியமைச்சர் இருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே கீழ்நோக்கி சென்று கொண்டிருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என நாம் கூறுகிறோம். ஆனால் பெட்ரோலிய பொருட்களுக்கு மாநிலங்கள் வெவ்வேறான வரி விதிக்கின்றன. ஜிஎஸ்டி அமல்படுத்தியபோது, பெட்ரோலிய பொருட்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் உறுதி அளித்திருந்தார். இந்த உறுதியை நிதியமைச்சர் எப்போது அளிப்பார்? நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு ஒரே மாதிரியான வரி விதிப்பது எப்போது? இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும்போதெல்லாம், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எவ்வளவு சதவீதம் வரிவிதிப்பு என்பது ஒருமனதாக முடிவு செய்யப்பட வேண்டும்.